கவிதை பக்கம்
உ பூவை (எ) பூலாங்ககுறிச்சி : விருந்தோம்பலின் முகவரியாம்! மூவேந்தர் ஆட்சி செய்த முத்தமிழ் நாடாம்.......... செந்தமிழ் நாட்டில் தன்னில், பரப்பளவில் வங்கக் கடலின் வாசல் தொட்டு பாசமிகு மனிதர் வாழும் எண்ணிக்கையில் விண்ணை தொடும் கோட்டையாம் புதுக்கோட்டையில்.......... வறுமை நீக்கும் மழை போல வற்றாத நீரால் மக்களின் தாகம் தீர்க்கும் நன்னீர்க் குளம்..... வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் சிங்கார வடிவேலன் திருக்கோவில்..... வாழ்வில் உயர்வதற்கு உய்ய வழி காட்டும் ஊரணிக்கரை அரசமரத்து விநாயகர்..... அமுதினும் இனிய அறுசுவை உணவை சமைக்கும் செட்டிநாட்டு பெண்களின் சமையற் கலைநயம்...... காண்போரை வியப்பிலும் மழை நீர் சேகரிப்பை இல்லத்தில் அமைத்த கட்டிட கலை.............. காலை கதிரவனைப் போல கடமை செய்யும் தன்மையும் அன்பையும் நற்பண்பையும் நாலும் பறை சாற்றும் மக்களும் ........... பூவை (எ ) பூலாங்குறிச்சியின் வாசம் குறையாத மலர்கள்!!!!!!!!!